அலெக்சேய் அர்புஸவ் எழுதிய ‘தான்யா’ நாடகம் சமகால நாடகங்களிலிருந்து வேறுபட்டது. 1939இல் அரங்கேறிய இந்த நாடகத்தில் ருஷ்யப் புரட்சி, உலகப் போர் முதலிய எந்தவிதமான ‘சமுதாய, வரலாற்றுப் பின்னணியும் கிடையாது. மற்ற நாடகங்களைப் போல மேடை நிறையப் பாத்திரங்களோ, பிரமிக்க வைக்கும் காட்சி அமைப்புகளோ இல்லை. கவித்துவத்துடன் எழுதப் பெற்ற இந்த நாடகம் ஒரு சிறுகதையைப் போல ஒரே ஒரு பாத்திரத்தைச் சுற்றிச் சுழல்கிறது. அந்தப் பாத் திரத்தின் வாழ்வில் ஏற்படும் நிகழ்ச்சிகளை வைத்து, தனி மனித வாழ்க்கைக்கும் சமுதாய ஓட்டத்துக்கு மிடையில் இருக்க வேண்டிய உறவை அழுத்தமாகக் கோடிட்டுக் காட்டுவதன் மூலம் ‘தான்யா’ வெற்றி பெறு கிறது. மனித உறவுகளில் ஏற்படும் உணர்ச்சி வெளிப்பாடு களை நெஞ்சைத் தொடும் வகையில் சித்திரிப்பதாலும் நாடக ஆக்க உத்திகளை நோத்தியாகப் பயன்படுத்தி யிருப்பதாலும் எல்லா வகைகளிலும் நல்ல நாடமாக அமைந்து விடுகிறது ‘தான்யா’.
தாமரை,செப்டம்பர் 1986
மொழிபெயர்ப்பாளர் : நா. முகம்மது செரீபு, எம்.ஏ.
வடிவமைப்பாளர்: அ. வால்த்மன்
பதிப்பாசிரியர்: வி. ஃபுர்னீக்கா
Al credits to Guptaji.
